தேமுதிக பிரமுகரை கொலை செய்த மனைவி கைது

சேலம் அருகே தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக பிரமுகரை கொலை செய்த மனைவி கைது
x
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. ஆட்டோ ஓட்டுநரான இவர்,தேமுதிக கிளை செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி ஆலயமணி, தன் 2 மகன்களுடன் திருநள்ளாறு கோயிலுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தன் வீட்டில் கலியமூர்த்தி பிணமாக கிடந்தது கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கலியமூர்த்தியின் மனைவி ஆலயமணிக்கும், வேன் டிரைவர் தேன்குமாருக்கும் இடையே தவறான உறவு தெரியவந்தது. இதை கலியமூர்த்தி கண்டித்ததால் ஆத்திரமடைந்த ஆலயமணி, தேன்குமாருடன் சேர்ந்து கணவரை கொன்றுள்ளார். இந்த சம்பவத்தில் ஆலயமணியும், தேன்குமாரும் பேசிய செல்போன் உரையாடலே கொலையை கண்டுபிடிக்க உதவியாக இருந்துள்ளது. இதில் 17 வயது சிறுவனும் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார். முக்கிய குற்றவாளியான தேன்குமார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து கொலையாளிகளை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்