மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்

கர்ப்பிணி பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி, அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மனைவிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கணவர் புகார்
x
மதுரை அருகே உள்ள கோழிமேடு கிராமத்தை சேர்ந்த யாஸ்மீன் என்ற பெண் கர்ப்பமாக இருப்பதாக தனியார் மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அப்பெண்ணுக்கு 3 மாதங்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.பின்பு மதுரை அரசு மருத்துவமனையில் யாஸ்மீனுக்கு   அறுவை சிகிச்சை செய்தபோது, அவரது வயிற்றில் குழந்தை இல்லை என்றும், கட்டி இருக்கலாம் என்றும் கூறியும் அனுப்பி  வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தனது மனைவிக்கு கர்ப்பமாக இருப்பதாக கூறி சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மதுரை ஆட்சியரிடம் யாஸ்மீனின் கணவர் நவநீத கிருஷ்ணன் மனு அளித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்