பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் ஆயிரம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கும் கல்வித்துறை
பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் ஆயிரம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்
x
பள்ளிக்கல்வித்துறை அதிரடி

* ஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை நோட்டீஸ்

* பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

* 17ஏ பிரிவின்கீழ் ஆசிரியர்களிடம்  விளக்கம் கேட்கும் கல்வித்துறை

 * தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட 300 மாணவர்களுக்கும் பருவத்தேர்வு எழுத தடை



10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது. 

* 2016-17 கல்வியாண்டில் நடந்த முடிந்த 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்கள் பெயர் பட்டியலை தேர்வுத்துறை தயாரித்தது. 

* அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரைத்தது. 

* இதனை தொடர்ந்து ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்த பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

* இதில் 70 சதவீதம் ஆசிரியர்கள் விளக்கம் அளித்துவிட்டதாகவும், எஞ்சிய 30 சதவீதம் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

* தவறும் பட்சத்தில் அந்த ஆசிரியர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

* இதேபோல், பொதுத்தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 10,11, 12  ஆகிய வகுப்புகளை சேர்ந்த 310 மாணவர்களிடம் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, 

* அவர்கள் 2 பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. 

* பள்ளிக்கல்வித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்