கால்வாயில் கிடந்த குழந்தையை மீட்ட பெண்ணிற்கு பரிசு
சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயில் கிடந்த குழந்தையை மீட்ட பெண்ணிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கினார்.
கால்வாயில் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண்மணி கீதாவை பாராட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சென்னை - எழும்பூரில், கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு சிடி வெளியீட்டு விழாவில் கீதாவை அழைத்து பாராட்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கி, கவுரவித்தார்.
Next Story