கால்வாயில் கிடந்த குழந்தையை மீட்ட பெண்ணிற்கு பரிசு

சென்னை வளசரவாக்கத்தில் கால்வாயில் கிடந்த குழந்தையை மீட்ட பெண்ணிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கினார்.
கால்வாயில் கிடந்த குழந்தையை மீட்ட பெண்ணிற்கு பரிசு
x
கால்வாயில் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண்மணி கீதாவை பாராட்டி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பரிசு வழங்கினார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சென்னை - எழும்பூரில், கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு சிடி வெளியீட்டு விழாவில் கீதாவை அழைத்து பாராட்டி,  அமைச்சர் விஜயபாஸ்கர்  பரிசு வழங்கி, கவுரவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்