பள்ளிகளில் ரூ.13 கோடி முறைகேடு புகார் - விக்கிரமராஜா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

13 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பள்ளிகளில் ரூ.13 கோடி முறைகேடு புகார் - விக்கிரமராஜா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
x
* சென்னை - கொட்டிவாக்கத்தில் உள்ள 2 பள்ளிகளுக்கு, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா,  தாளாளராக இருந்து வருகிறார். 

* 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டதாக  நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன், புகார் எழுப்பினார்.  

* பள்ளிகளில் இருந்து 13 கோடி ரூபாய் வரை விக்கிரமராஜா முறைகேடு செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பத்மநாபன், சென்னை குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவின்படி, விக்கிரமராஜா உள்ளிட்ட 4 பேர் மீது எழும்பூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்