சட்ட விரோதமாக மது விற்பனை - லஞ்சம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது

போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பதற்கு, மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு சென்ற 2 பேர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட விரோதமாக மது விற்பனை - லஞ்சம் கொடுக்க முயன்ற 2 பேர் கைது
x
ராமேஸ்வரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வருபவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களாக மது விற்பனை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சட்டவிரோத மது விற்பனையை கண்டு கொள்ளாமல் இருக்க, மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளனர்.அப்போது மாவட்ட காவல் துறை அலுவலகத்திற்கு வந்த மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.எஸ்.பி வெள்ளைத்துரை, வெளியே நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது அவர்கள் போலீசாருக்கு 3 லட்ச ரூபாய் லட்சம் கொடுக்க வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்