காவிரி தாய்க்கு ஆடி சீர்வரிசை வழங்கினார் ரங்கநாதர் - பக்தர்கள், ரங்கா, ரங்கா என முழக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காவிரி தாய்க்கு ஆடி சீர்வரிசை வழங்கும் விழா கோலகலமாக நடைபெற்றது.
காவிரி தாய்க்கு ஆடி சீர்வரிசை வழங்கினார் ரங்கநாதர் -  பக்தர்கள், ரங்கா, ரங்கா என முழக்கம்
x
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காவிரி தாய்க்கு, ஆடி சீர்வரிசை வழங்கும் விழா கோலகலமாக நடைபெற்றது. ஆடிப்பெருக்கு தினமான நேற்று, தங்கப்பல்லக்கில் அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளிய ரங்கநாதர், மாலை வரை அங்கிருந்து சேவை சாதித்தார். அதன்பின்னர் பட்டுச்சேலை, மாலை, சந்தனம், தாம்பூலம், தாலி பொட்டு ஆகிய மங்கல பொருட்களை யானை மீது வைத்து, காவிரி தாய்க்கு சீதனமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்