விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ஊழல் புகார் - பெண் அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை

சென்னை - அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக, பெண் அதிகாரி உமாவின் கோட்டூர்புரம் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
விடைத்தாள் மறு மதிப்பீட்டில் ஊழல் புகார் - பெண் அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை
x
சென்னை - அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீட்டு 
 ஊழல் விவகாரம் தொடர்பாக, பெண் அதிகாரி உமாவின் கோட்டூர்புரம் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். பல நூறு கோடி ரூபாய் முறைகேடு புகாரில், உமா தவிர, மண்டல ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், சிவக்குமார் , கண்காணிப்பாளர்கள் சுந்தரராஜன், மகேஷ்பாபு, அன்புச்செல்வன், பிரதீபா, பிரகதீஸ்வரர், ரமேஷ் கண்ணன், ரமேஷ் ஆகிய
10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. உமாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். செமஸ்டருக்கு 40 கோடி ரூபாய் வீதம் மொத்தம் 240 கோடி ரூபாய் வரை, ஊழல் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கணக்கிடப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்