பிரியாணிக்காக ஓட்டல் ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி

சென்னையில், பிரியாணிக்காக ஓட்டல் ஊழியரை தி.மு.க. நிர்வாகி பாக்சிங் முறையில் அடித்து உதைத்துள்ளார்.
பிரியாணிக்காக ஓட்டல் ஊழியரை தாக்கிய திமுக நிர்வாகி
x
* சென்னையில், பிரியாணிக்காக ஓட்டல் ஊழியரை தி.மு.க. நிர்வாகி அடித்து உதைத்துள்ளார். 

* விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றுக்கு கடந்த 29ம் தேதி இரவு பத்தரை மணியளவில், தி.மு.க. மாணவரணி நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்றுள்ளனர்.

* அங்கு சர்வர் கருணாநிதி மற்றும் பிரகாஷ் ஆகியோரை யுவராஜ் சரமாரியாக தாக்கியுள்ளார். 

* பாக்சிங் முறையில் ஓட்டல் ஊழியர்களை அவர் தாக்கிய காட்சிகள், அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன. இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Latest Update : 

பிரியாணிக்காக தாக்குதல் நடத்தியவர்கள் மீது திமுக நடவடிக்கை...

விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம். மேலும் தாக்குதல் நடத்திய யுவராஜ், திவாகர் ஆகியோர் திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக நீக்கம்.





Next Story

மேலும் செய்திகள்