மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் பாலியல் குற்றச்சாட்டு - கோவை குற்றவியல் காவல்துறை உதவி ஆய்வாளர் மீது புகார்
கோவை குற்றவியல் காவல்துறை உதவி ஆய்வாளர் தமக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக,மோசடி வழக்கில் கைதான ஸ்ருதி என்ற பெண் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை சேர்ந்த பாலமுருகன் என்பவரை, கோவையை சேர்ந்த ஸ்ருதி என்ற பெண், முகநூல் வாயிலாக பழகி, 45 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ருதி மற்றும் அவரது தாயார் சித்ரா, சகோதரர் பிரசன்னா ஆகியோரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளிவந்துள்ள ஸ்ருதி, கோவை குற்றவியல் காவல்துறை உதவி ஆய்வாளர் தமக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
Next Story