ரயிலை மறித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில்,நூற்றுக்கும் ​மேற்பட்ட பயணிகள் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயிலை மறித்து பயணிகள் ஆர்ப்பாட்டம்
x
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வழியாக திருமால்பூர் செல்லும் ரயில், தொடர்ந்து தாமதமாக வருவதாக குற்றம் சாட்டிய அவர்கள், திடீரென நேற்றிரவு ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்து அங்கு வந்த ரயில்வே துறை உயரதிகாரிகள் மற்றும் போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர  பேச்சுவார்த்தைக்குப்பின், அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று கலைந்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்