தண்ணீர் லாரி மோதி பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கை
தண்ணீர் லாரி மோதி பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
*சென்னை ஆவடியை அடுத்த பருத்திப்பட்டில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொன்னம்பேடு கிராம பொதுநலச் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
*இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை அண்ணாசாலையில் டேங்கர் லாரி மோதி தாய் மகன் பலியான சம்பவம் தொடர்பாக பத்திரிக்கை செய்தியை சுட்டிக்காட்டி நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
*இதுபோன்று தண்ணீர் லாரி மோதி பலியானவர்களின் எண்ணிக்கை மற்றும் டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய
*சென்னை மாநகர காவல் ஆணையர், திருவள்ளூர், காஞ்சிபுரம்
மாவட்ட எஸ்.பி.க்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
*மேலும், சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவது குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பருத்திப்பட்டு நீர்நிலைகளை ஆய்வு செய்து இரண்டு வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என திருவள்ளூர் ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
Next Story