திருமணமான 3 மாதத்தில் "காதல் ஜோடி" தற்கொலை- அதிர்ச்சி சம்பவம்...!

மீஞ்சூர் பகுதியில் திருமணமான காதல் ஜோடியின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான 3 மாதத்தில் காதல் ஜோடி தற்கொலை- அதிர்ச்சி சம்பவம்...!
x
       *மீஞ்சூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி இருவரும் காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 
       *திருமணத்திற்கு பிறகு இருவரும் கேசவபுரம் பகுதியில் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில் வெகு நேரமாகியும் கனவன், மனைவி இருவரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே பார்த்துள்ளனர்.அப்போது வெங்கடேஷ் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.பின்னர் போலீசார் வந்து வீட்டினுள் சென்று பார்க்கையில், தனலட்சுமி வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர்.இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
       *இதனிடையே தனலட்சுமி எழுதி வைத்திருந்த கடித்ததில், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியுள்ளார். வெங்கடேஷின் பிறந்த 
நாளன்று இருவரும் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்