எம்பிபிஎஸ், பிடிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு : ஜூலை 30,31-ம் தேதிகளில் நடைபெறும்

எம்பிபிஎஸ், பி.டி.எஸ்.சேர்க்கை கலந்தாய்வு,வரும் 30,31 ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு : ஜூலை 30,31-ம் தேதிகளில் நடைபெறும்
x
மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு காரணமாக, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து  வரும் 30,31 ம் தேதிகளில் 2ம் கட்ட  கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி சேர்க்கை செயலாளர் செல்வராஜன் அறிவித்துள்ளார். அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகம் வழங்கிய இடங்களில் நிரம்பாத இடங்களை மீண்டும் சிபிஎஸ்இ வழங்கினால், அந்த இடங்களுக்கு அரசு ஒதுக்கீட்டின் கீழ்  தனியாக கலந்தாய்வு நடைபெறும் எனவும் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்