சென்னையை தொடர்ந்து கோவையில் ரோபோட் உணவகம்

கோவையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ரோபோ உணவகத்திற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
சென்னையை தொடர்ந்து கோவையில் ரோபோட் உணவகம்
x
ஜப்பான், சீனா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கோவையில் ஒரு உணவகம் திறக்கப்பட்டிருக்கிறது. 

உணவகத்திற்கு செல்பவர்களை வரவேற்பதே ரோபோக்கள் தான். உணவருந்த வருபவர்களை  அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்து  தேவையான உணவை ஆர்டர் எடுப்பது வரை அனைத்தும் ரோபோக்களே... 

ஆர்டர் கொடுத்த உணவை சமையலறைக்கு சென்று எடுத்து வந்து மேசையில் வைத்து விட்டு செல்லும் இந்த நவீன எந்திரன்... 

சென்னையில் ஏற்கனவே ரோபோட் உணவகம் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 2 ஆவதாக கோவையில் இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வமாக ரோபோக்களை பார்க்க வருவதாக கூறுகிறார் உணவக உரிமையாளர் ஜெகதீஷ்... 


Next Story

மேலும் செய்திகள்