5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் : தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க பள்ளி ஆசிரியர்கள், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம் :  தலைமை செயலகத்தை முற்றுகையிட முயற்சி
x
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆசிரியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்,  பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் ஆகியவை அவர்களின் கோரிக்கைகள். தமிழகம் முழுவதிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர், தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதற்காக அவர்கள் முயற்சி செய்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை  காவல்துறையினர் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்