தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை : சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை : சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஸ்டாலின்
x
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரில் சந்தித்து இது தொடர்பாக அவர் மனு அளித்தார். ஸ்டாலினுடன், துரைமுருகன் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்தனர்.  ஆளுநரை சந்தித்த பிறகு, பேட்டியளித்த ஸ்டாலின், புகார் மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்