116 அடியை எட்டியது மேட்டூர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 116.98 அடியை எட்டியது
116 அடியை எட்டியது மேட்டூர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி
x
கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம், இன்று காலை நிலவரப்படி, 116.98 அடியை எட்டியது. விநாடிக்கு, தற்போது 61 ஆயிரத்து 644 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம், விநாடிக்கு 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வரத்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணை, நாளை மாலைக்குள், முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், மேட்டூர் அணை, 120 அடியை எட்டியது. 39 - வது முறையாக, மேட்டூர் அணை, முழு கொள்ளளவை எட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்