மேட்டூர் அருகே காவிரியில் குளித்தபோது விபரீதம் - 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மேட்டூர் அருகே காவிரியில் குளித்தபோது விபரீதம்- 3 பெண்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு...
மேட்டூர் அருகே காவிரியில் குளித்தபோது விபரீதம் - 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
x
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ரெட்டியூர் பகுதியில், இன்று காலை 6 பேர், காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். பெருந்துறை அருகே விஜயமங்கலம் என்ற இடத்தை சேர்ந்த சரவணன் உள்ளிட்ட 6 பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், தனுஸ்ரீ என்ற பெண்ணை காப்பாற்றினர். மற்ற 5 பேரையும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடினர். அப்போது, சரவணன், அவரது மனைவி மைதிலி மற்றும் அவர்களின் உறவினர்களான நவீனா, வாணிஸ்ரீ ஆகிய 4 பேரும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.  சரவணின் 9 வயது மகன் ஹரிஹரனை தேடும் பணியில் பரிசல்காரர்களும் தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்