"விளை பொருட்களுக்கு பேருந்துகளில் இலவசம்"- தமிழக அரசு அனுமதி

லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால், விவசாய விளை பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல தமிழக அரசு அனுமதி
விளை பொருட்களுக்கு பேருந்துகளில் இலவசம்- தமிழக அரசு அனுமதி
x
லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால், விவசாய விளை பொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல தமிழ கஅரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அரசு போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் எந்த கட்டணமும் இல்லாமல், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை, ஏற்றி செல்லலாம் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக  காய்கறிகள் அழுகுவதை தடுக்க, தமிழக அரசு, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்