அமராவதி, திருமூர்த்தி அணை மற்றும் கெலவரப்பள்ளி நீர்தேக்கம் திறப்பு

அமராவதி, திருமூர்த்தி அணை மற்றும் கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
அமராவதி, திருமூர்த்தி அணை மற்றும் கெலவரப்பள்ளி நீர்தேக்கம் திறப்பு
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டம் அமராவதி, திருமூர்த்தி ஆகிய அணைகளில் இருந்து 27ஆம் தேதியும், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தில் இருந்து வரும் 25ஆம் தேதியும் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இரு அணைகளில் தண்ணீர் திறப்பதன் மூலம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 41 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி நீர்தேக்கத்தில் தண்ணீர் திறப்பதன் மூலம் ஒசூர் வட்டத்தில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் என செய்தி குறிப்பில் அவர் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்