சென்னை போரூரில் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் திருட்டு

சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையன் கைது
சென்னை போரூரில் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் திருட்டு
x
சென்னை போரூரில் கடையின் பூட்டை உடைத்து 6 லட்சம் ரூபாயை திருடி சென்ற நபரை, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.அவரிடமிருந்து ஓரு லட்சம் பணமும், 2 சவரன் தங்க நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சைதாப்பேட்டையை சேர்ந்த முருகன், கடையின் முன்பாக சுமார் ஒருமணிநேரம் ஒளிந்து கொண்டுள்ளான். பின்னர் அங்கேயே மது அருந்தி, உணவு சாப்பிட்ட பிறகு, சிறிதுநேரம் உறங்கிவிட்டு ஆயுதங்களுடன், பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளான். போலீசார் கண்டுபிடிக்காதவாறு கைரேகை பதிவுகளை துணியால் துடைத்துவிட்டு முருகன் தப்பி செல்லும் காட்சிகளும் கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்