கேரளா அமைச்சர் தமிழகம் வருகை
அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில், பங்கேற்பதற்காக கேரள அமைச்சர் எம்.எம்.மணி, விருதுநகர் மாவட்டம் வந்துள்ளார்.
அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில், பங்கேற்பதற்காக கேரள அமைச்சர் எம்.எம்.மணி, விருதுநகர் மாவட்டம் வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலுக்கு சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரள மாநிலத்தில் பள்ளி முதல் கல்லூரி வரை நவீனமயமாக்கப் பட்டுள்ளதாக கூறினார். மேலும், தங்கள் மாநில அமைச்சர்களை சந்திப்பதற்கு, பிரதமர் மோடி நேரம் ஒதுக்கவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story