மாணவி உயிரிழந்த சம்பவம் - பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைப்பு

பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
மாணவி உயிரிழந்த சம்பவம் - பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைப்பு
x
பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைப்பு

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேரிடர் பயிற்சியின் போது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் என்ற பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். ஆலாந்துறை காவல்நிலையத்தில் இருந்து அவர் இன்று கோவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆறுமுகத்துக்கு வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறுமுகத்தை விசாரிக்க 7 நாட்கள் வழங்க கோரி காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதையடுத்து பயிற்சியாளர் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்