தகாத உறவு - பிசியோதரபி மருத்துவர் படுகொலை

திட்டமிட்டு கொலை செய்த பெண் கைது, விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
தகாத உறவு - பிசியோதரபி மருத்துவர் படுகொலை
x
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பொன்குடிக்காட்டை சேர்ந்தவர் விஜயகுமார். சென்னையில் பிசியோதரபி மருத்துவராக பணியாற்றி வந்த இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான பொன்குடிக்காட்டிற்கு சென்றிருந்தார். அங்கிருந்து திங்கள் கிழமை தனது மனைவியை பார்த்துவிட்டு வருவதாக ஈரோடு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், திடீரென அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் மனைவி வீட்டிற்கு செல்லவில்லை... இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், செந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விஜயகுமாரின் செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில், இறுதியாக அவர், கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்ணிடம் பேசியது தெரியவந்தது.இதனையடுத்து ஈஸ்வரியை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.பிசியோதரபி மருத்துவர் விஜயகுமாருக்கும், ஈஸ்வரிக்கும் பல நாட்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. திடீரென இருவருக்கும் இடையே பிரச்சினை எழ, தனது சகாக்கள் உதவியுடன் விஜயகுமாரை தீர்த்து கட்டியிருக்கிறார் ஈஸ்வரி...ஈஸ்வரி அளித்த தகவலின் பேரில், திருச்சி மாவட்டம் திருவளர்சோலை அருகே காவிரி கரையோரத்தில் கிடந்த விஜயகுமாரின் உடல் கைப்பற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்