எஸ்.ஐ. உடையில் மிரட்டிய போலி பெண் போலீஸ் - கைது செய்து தீவிர விசாரணை

நாமக்கல் அருகே காவல் உதவி ஆய்வாளர் உடை அணிந்து பெண் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எஸ்.ஐ. உடையில் மிரட்டிய போலி பெண் போலீஸ் - கைது செய்து தீவிர விசாரணை
x
எஸ்.ஐ. உடையில் மிரட்டிய போலி பெண் போலீஸ்

நாமக்கல் அடுத்த அலங்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று அதிகாலை காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் பெண் ஒருவர் புகுந்துள்ளார். அங்கு மருந்துகள் முறைகேடாக வெளியில் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளதாக கூறி, அப்பெண் விசாரணை நடத்தியுள்ளார். இது குறித்து சந்தேகம் அடைந்த செவிலியர்கள், எருமப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் பெயர் விமலாதேவி என்றும், ஒரு வருடத்திற்கு முன்பு காணாமல் போன தமது மகள் குறித்து அறிய, போலீஸ் வேடமிட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. உடனடியாக விமலா தேவி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்