4 ஆண்டுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது சிறுவாணி அணை

கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, 4 ஆண்டுகளுக்கு பிறகு முழுவதுமாக நிரம்பி உள்ளது.
4 ஆண்டுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியது சிறுவாணி அணை
x
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. தற்போது, அணையின் நீர்மட்டமானது, முழு கொள்ளளவான 50 அடியை எட்டி உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, அணை முழுவதுமாக நிரம்பி உள்ளதால், கோவை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு கோவையின் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story

மேலும் செய்திகள்