நெல்லை மாவட்டத்தில் தொழில் போட்டியால் தம்பியை கொலை செய்த சகோதரர்கள்

தப்பியோடிய இருவருக்கு போலீசார் வலைவீச்சு
நெல்லை மாவட்டத்தில் தொழில் போட்டியால் தம்பியை கொலை செய்த சகோதரர்கள்
x
நெல்லை மாவட்டம் மஞ்சங்குளத்தில், தொழில் போட்டி காரணமாக, இளைஞர் ஒருவரை, அவரது சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சங்குளத்தை சேர்ந்த சுப்பையா என்பவர் குளங்களில் மணல் அள்ளி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சுப்பையாவுக்கும் அவரது பெரியப்பா மகன் சுடலைக்கண்ணு என்பவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது . இந்நிலையில் நேற்று ஜீயர் பகுதியில் தூங்கி கொண்டிருந்த  சுப்பையாவை அவரது பெரியப்பா மகன்கள் சுடலைக்கண்ணு மற்றும் ஆறுமுகம் ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்