என் வீட்டை அபகரிக்க முயற்சி - நடிகை ஜெயசித்ரா
பில்லி, சூனியம் வைத்து, தமது சொந்த வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக நடிகை ஜெயசித்ரா புகார் தெரிவித்துள்ளார்
பில்லி, சூனியம் வைத்து, தமது சொந்த வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக நடிகை ஜெயசித்ரா புகார் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 ஆண்டுகளாக தனது வீட்டில் இருந்த இளமுருகன் மீது பல மோசடி புகார்கள் இருப்பதாக குற்றம்சாட்டினார். வாடகை பாக்கியாக 7 லட்சம் ரூபாய் இளமுருகன் தமக்கு தர வேண்டும் என தெரிவித்த நடிகை ஜெயசித்ரா, இந்த விவகாரத்தில் எனக்கு உரிய நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Next Story