மொய் கொடுப்பது போல் நடித்து பண மோசடி - 7 பேர் கைது

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே திருமண நிகழ்ச்சியில் மொய் கொடுப்பது போல் நடித்து மோசடி
மொய் கொடுப்பது போல் நடித்து பண மோசடி - 7 பேர் கைது
x
* மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே திருமண நிகழ்ச்சியில் மொய் கொடுப்பது போல் நடித்து மோசடி செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

* பரவை என்னும் இடத்தில், ராஜசேகரன் என்பவரது திருமண வீட்டில் மொய் எழுதிக் கொண்டிருந்தவரிடம் சில்லறை கேட்டு ஒரு சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சந்தேகமடைந்த திருமண வீட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

* உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டி, நடத்திய விசாரணையில், திருமண விழாக்களில் இது போன்ற பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்