பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து - சிறுவன் கைது

இறைச்சி கடையில் வேலைபார்க்கும் சிறுவன் கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளான்.
பள்ளி மாணவனுக்கு கத்தி குத்து - சிறுவன் கைது
x
குன்னூர், சின்ன கரும்பாலம் பகுதியில் 9ஆம் வகுப்பு படித்துவரும் சங்ரித், பள்ளி முடிந்ததும் அவனது நண்பர்களுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.  அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள மாட்டிறைச்சி கடையில் வேலை பார்க்கும் சிறுவன் ஒருவன் சங்ரித்தின் நண்பர்களை தாக்க முற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அதனை தடுக்க சென்ற சங்ரித்தை, இறைச்சி கடையில் வேலைபார்க்கும் சிறுவன் கத்தியை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளான்.  படுகாயம் அடைந்த சங்கித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்ரித்தை தாக்கிய சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்