குழந்தைகள் நல மைய அதிகாரிகள் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் ரோகிணி

வளர்ச்சித் திட்டங்களை பார்வையிட்ட ஆட்சியர்
குழந்தைகள் நல மைய அதிகாரிகள் மீது நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் ரோகிணி
x
சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். பச்சனம்பட்டி கிராமத்தில் உள்ள குழந்தைகள் நல மையத்தை பார்வையிட்ட அவர், கடந்த ஒரு மாதமாக  குழந்தைகள் எடை மற்றும் உடல் நலம் குறித்த ஆவணங்கள் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்ததால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் கிராம மக்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுகாதார மேம்பாடு குறித்து ஆலோசனை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்