சத்துணவு முட்டை, பருப்பு, சத்துமாவு விநியோகத்தில் முறைகேடு - வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை உள்ளிட்ட பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சென்னை, பெங்களூரு, நாமக்கல் உள்ளிட்ட 76 இடங்களில் சோதனை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாமக்கலில் உள்ள சத்துமாவு வழங்கும் ஒப்பந்ததாரருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது. ஒரு சில இடங்களில் சோதனை முடிந்துள்ள நிலையில், அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரொக்கப் பணம் அடிப்படையில் வரிஏய்ப்பு குற்றங்கள் நடந்துள்ளதா எனவும் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story