மிட்டாய் சாப்பிடும்போது பேட்டரி செல்லை விழுங்கிய சிறுமி : சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலைக்கழிப்பு

பேட்டரி செல்லை விழுங்கிய சிறுமிக்கு 5 நாட்களாக சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலைகழிப்பதாக பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர்.
மிட்டாய் சாப்பிடும்போது பேட்டரி செல்லை விழுங்கிய சிறுமி : சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலைக்கழிப்பு
x
சிவகங்கை திரவுபதி அம்மன் கோவில் அருகே உள்ள பள்ளி தெருவை சேர்ந்த ரூபேஷ், ஆனந்தியின்  4 வயது இளைய மகள் மெட்டில்டா. கடந்த ஒன்றாம் தேதி மெட்டில்டா, மிட்டாய் சாப்பிடும் போது பேட்டரி செல்லையும் விழுங்கிவிட்டாள். இதனையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்த்து, அறுவை சிகிச்சை நிபுணர் கருத்து கேட்க வேண்டும் என்று கூறி 3 நாட்களாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த தந்தை ரூபேஷ், தனியார் மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கையில், பேட்டரி செல் சிறுமியின் வயிற்றின் அடியில் இருப்பது தெரிய வந்தது. தகுந்த சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலைகழித்தால் அந்த சிறுமியின் பெற்றோர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்