நீதிபதி முன்னிலையில் ரவுடி ஆனந்தனின் உடல் பிரேத பரிசோதனை

சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நீதிபதி முன்னிலையில் ரவுடி ஆனந்தனின் உடல் பிரேத பரிசோதனை
x
சென்னையில் நேற்று முன்தினம் இரவு ரவுடி ஆனந்தன் போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 3 மணி நேரம் நடந்த பிரேத பரிசோதனையின் போது ஆனந்தன் உடலில் இருந்த குண்டுகள் எடுக்கப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்