நாங்குநேரி சம்பவத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 இளைஞர்கள்

x

நாங்குநேரியில் தொடர்பாக, ராஜபாளையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 2 இளைஞர்களை விடுவிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் அருகே செந்தட்டியாபுரத்தை சேர்ந்த மலர்மன்னன் மற்றும் மகேந்திரன் ஆகியோரை, நாங்குநேரியில் மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்து அனுப்பிய சிறுதி நேரத்தில் மீண்டும் அவர்களை போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, 2 இளைஞர்களின் உறவினர்களும், வேலாயுதபுரம் சோதனைச் சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டர். அப்போது, மலர் மன்ன்னின் அண்ணன் மற்றும் தாயார் ஆகியோர், தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய போலிசார், 2 இளைஞர்களையும் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்