ஒரே நேரத்தில் கிளம்பிய 2 பஸ் - சடாரென்று சட்டையை கழட்டிய டிரைவர்

x

தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் நேர பிரச்சனையால் அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் சட்டையை கழற்றி சண்டைக்கு அழைத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக தனியார் பேருந்துக்கு பின்னர் அரசு பேருந்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த சில நாட்களாக தனியார் பேருந்துக்கு முன்னதாக அரசு பேருந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால், அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் சட்டையை கழற்றி சண்டைக்கு அழைத்த நிலையில், போலீசார் இருதரப்பையும் சமரசம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்