குப்பை தொட்டியில்.. குறை மாதத்தில்.. இறந்து கிடந்த பிறந்த 2 பெண் சிசுக்கள்-பின்னணியில் ஓர் பயங்கரம்

x

மேட்டுப்பட்டியில் கடந்த 30ம் தேதி மாநகராட்சி குப்பை தொட்டியில் இரண்டு பெண் சிசுக்கள் இறந்த நிலையில் கிடந்தது. தகவலறிந்த தெற்கு போலீசார் இரண்டு பெண் சிசுக்களின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனை முடிவில், அவை ஐந்து மாத குறை பிரசவம் என்றும், இறந்தே பிறந்ததுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், சந்தேகத்திற்கு இடமான ஒருவரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், திருமணம் ஆகாத தனது 19 வயது மகள் கர்ப்பமடைந்ததாகவும், அதனை கலைக்க கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாகவும், அதனால் கருச்சிதைவு ஏற்பட்டு, இறந்த நிலையில் 2 பெண் சிசுக்கள் வீட்டிலேயே பிறந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்