16 வயது சிறுமி திடீர் கர்ப்பம்... அதிர்ச்சியில் உறைந்த கணவனை இழந்த தாய் - வெளிவந்த அதிர்ச்சி

x

சேலத்தில், கணவரை பிரிந்த பெண் ஒருவரின் 16 வயது மகளை, ஆசை வார்த்தைகள் கூறி, இளைஞர் ஒருவர் நெருக்கமாக பழகியுள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடையவே இந்த விவகாரம் அவரது தாய்க்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சிறுமியிடம் நெருங்கி பழகிய நபர் நாகர்கோவிலை சேர்ந்த விஸ்வா என தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து விஷ்வா மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து விஷ்வாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்