104 வயது அக்கா இறந்த சோகம் தாங்காமல் அடுத்த நாளே இறந்த 102 வயது தம்பி - சோகத்தில் ஊர் மக்கள்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜனதாபுரம் பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மூதாட்டி, வயது மூப்பு காரணமாக 104 வயதில் காலமானார். அக்கா இறந்த துயரம் தாங்காமல் அவரது சகோதரரான துரைசாமியும், அடுத்த நாளே 102 வயதில் காலமானார். திமுக, அதிமுக உறுப்பினர்கள், கிராம மக்கள் என பலரும் அவர்களது உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 4 தலைமுறைகளை பார்த்த அக்கா, தம்பி இருவரும் பாசத்தின் காரணமாக இறப்பிலும் பிரியாத சம்பவம், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்