தமிழ் பாடத்தில் மாணவியின் சாதனை
தமிழ் மொழி பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று திருச்செந்தூரை சேர்ந்த பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார். காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலை பள்ளியை சேர்ந்தவர் மாணவி துர்கா. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய இவர், தமிழ் மொழி பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளார். இது குறித்து மாணவி துர்கா கூறுகையில், பிற மொழிகளை விட தமிழ் மொழியில் படிப்பதே சிறப்பானது. ஆசிரியர்களின் உறுதுணையால் இது சாத்தியமானது என தெரிவித்துள்ளார்.
Next Story