மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவில்லையா?... இன்று உங்களுக்கு வரப்போகும் முக்கிய SMS

x

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. இந்நிலையில், விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்ப தார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு இன்று முதல் அனுப்பி வைக்கப்படுகிறது... ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்