ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நூறு கோடி ரூபாய் வருவாய்

x

நேற்று 14 ஆயிரத்து 449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசுக்கு 99 கோடியே 62 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 35 ஆயிரத்து 149 ஆவணங்கள் பதிவாகியுள்ள நிலையில், வருவாய் 166 கோடியே 19 லட்ச ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை 11 லட்சத்து 57 ஆயிரத்து 683 ஆவணங்கள் பதியப்பட்டு, மொத்தம் 5 ஆயிரத்து 845 கோடியே 43 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 3 வரை 11 லட்சத்து 87 ஆயிரத்து 661 ஆவணங்கள் பதியப்பட்டு, மொத்தம் 5 ஆயிரத்து 809 கோடியே 65 லட்ச ரூபாய் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Next Story

மேலும் செய்திகள்