"ரிசர்வ்டா? அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட்டா?" - நெஞ்சை உருக்கும் தமிழ் பெண்ணின் கதறல்

x

சென்னை செல்ல விரைவு ரயிலில் முன்பதிவு செய்த ஒரு பெண், வட மாநிலத்தவரின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர்பிழைத்ததாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

கேரளாவிலிருந்து உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் வரை ராப்டிசாகர் என்ற விரைவு ரயில் செல்கிறது. சேலம் வழியாக செல்லும் இந்த ரயிலில் சென்னை செல்ல பிருந்தா என்ற பெண் முன்பதிவு செய்துள்ளார்.

S4 பெட்டியில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில் அப்பெண் ரயிலில் ஏறியபோது 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உட்கார இடமின்றி கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் தற்கொலை செய்து கொள்வதாக கூறி உயிர்தப்பியதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்