நடுரோட்டில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதிய கார் - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, தாருமாறாக ஓடி, அரசு பேருந்தில் மோதி விபத்துக்குள்ளானது. கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகரைச சேர்ந்த மகேஷ் என்பவர், கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், தாருமாறாக ஓடி எதிரில் வந்த அரசுப் பேருந்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மகேஷ், மருத்துவமனையில் அனுப்ப‌ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிசிடிவியில் பதிவான விபத்துக் காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்