மகளிர் ப்ரீமியர் லீக் டி.20 - ஒரு ரன் வித்தியாசத்தில்.. டெல்லியை மிரளவிட்ட உ.பி

x

மகளிர் ப்ரீமியர் லீக் டி.20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில், உத்தரபிரதேச அணி ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் உத்தரபிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தரபிரதேசம், 138 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில், கேப்டன் மெக் லானிங் 60 ரன்கள் எடுத்தார். இருப்பினும் மற்ற பேட்டர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஒவரில் டெல்லியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த அணியின் கைவசம் 3 விக்கெட்டுகளே இருந்தன. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ராதா யாதவ் சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்தார். இதனால் டெல்லி அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓவரின் 3வது பந்தில் ராதா யாதவ் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஜோனாசென் ரன் அவுட் ஆக, ஓவரின் 5வது பந்தில் டைட்டாஸ் சாது ஆட்டமிழந்தார். இதன்மூலம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆன டெல்லி அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.


Next Story

மேலும் செய்திகள்