உலகக்கோப்பை செஸ் போட்டி.. அரையிறுதிக்கு முன்னேறிய தமிழக வீரர்..

x

உலகக்கோப்பை செஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா.

அசர்பைஜான் நாட்டின் பெக்குநகரில் உலகக்கோப்பை செஸ் போட்டி நடைபெற்றுவருகிறது. இதன் காலிறுதி சுற்றில் சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன் போட்டியிட்ட பிரக்ஞானந்தா, அவரை 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பின் வீழ்த்தினார். இதனால், அரையிறுதிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, அடுத்ததாக கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கருவானாவுடன் போட்டியிட உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்