உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்... ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேற்றம்

x

ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா முன்னேறி உள்ளார்.

ஆடவர் ஈட்டியெறிதல் தகுதிச் சுற்று புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.

இதில், தனது முதல் முயற்சியிலேயே 88 புள்ளி 77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியெறிந்து முதல் வீரராக இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா முன்னேறினார்.

இதன்மூலம், அடுத்த ஆண்டு பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கும், இந்தியாவின் தங்க மகனான நீரஜ் சோப்ரா தகுதி பெற்றுள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜேனா, டி.பி.மானு ஆகிய 3 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்