அடித்து ஓடவிட்ட வெஸ்ட்இண்டீஸ்.. அபாய கட்டத்தில் இந்தியா

x

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. கயானாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த‌து. 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி, 152 ரன்கள் எடுத்த‌து. அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்களை எடுத்தார். பின்னர் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, 18.5ஆவது ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்த‌து. இதன் மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்