இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

x

இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப சூழல் காரணமாக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி, மீதமுள்ள 3 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

காயத்தில் இருந்து மீண்டு வரும் கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உடற்தகுதியை நிரூபித்த பின் அணியில் இடம்பெறுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

மிடில் ஆர்டர் பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், 2வது போட்டியில் ஓய்வில் இருந்த சிராஜ் அணிக்கு திரும்பியுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் ஆகாஷ்தீப் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயஸ் ஐயரை தவிர்த்து 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்கள் அணியில் தொடர்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்